வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் குழு தா க்குதல் : இருவர் காயம்!!

743

வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில்..

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்குள் புகுந்த இளைஞர் குழு அங்கிருந்த இருவர் மீது தா க்குதல் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் பாடசாலைக்கிடையிலான 12வயது பிரிவினருக்கான (ஆண், பெண்) இருபாலருக்குமான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்தில் இன்று (29.09.2019) இடம்பெற்றது.

இதன் போது குறித்த மைதானத்திற்கு வெளியே நின்ற இளைஞர் குழுக்கிடையே த கராறு ஏற்பட்டுள்ளது. த கராறின் பின்னர் அவற்றில் சில இளைஞர்கள் மைதானத்திற்குள் புகுந்து அங்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியினை கு ழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை மைதானத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்த நொச்சிமோட்டை கணேஸ் உயர்தர வித்தியாலய அதிபர் மற்றும் பெற்றோர் ஒருவர் மீது அவ் இளைஞர் குழு தா க்குதல் மேற்கொண்டுவிட்டு மைதானத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் சேவைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த போதிலும் ஒன்றரை மணித்தியாலத்திற்கு பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் காயமடைந்துள்ள நபர்களிடமும் முறைப்பாட்டினை பெற்றுள்ளனர்.