வவுனியாவில் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சத்திரசிகிச்சை!!

492

கட்டாக்காலி நாய்களின்..

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துச் செல்லும் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் வவுனியா நகரசபையினருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக இன்று (30.09.2019) வவுனியா நகரப்பகுதியில் திரியும் கட்டாக்காலி நாய்களை வாகனம் ஒன்றின் மூலம் ஏற்றி வவுனியா நகரசபையின் வாகனத்தரிப்பிடத்தில் நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன.

வவுனியா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் சிவராமலிங்கம் கிரிதரனின் மேற்பார்வையின் கீழ் இச் செயற்றிட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதன் போது இருபதுக்கு மேற்பட்ட கட்டாக்காலி நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.