வவுனியா நகரசபை பொது நூலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா!!

590

இடம்பெற்ற நவராத்திரி விழா

நவராத்திரி விரதத்தின் மூன்றாம் நாள் துர்க்கையின் பூஜை வழிபாடுகள் வவுனியா நகரசபை செயலாளர் இராசையா தயாபரன் தலைமையில் வவுனியா நகரசபை பொது நூலகத்தில் நேற்று (01.10.2019) சிறப்பாக இடம்பெற்றது.

நவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் 9 இரவு, 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்துக்களின் பண்டிகையாகும். இத்திருவிழா மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை மையப்படுத்தி நவராத்திரி பூஜைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவி மற்றும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகியோருக்கு நவராத்திரி விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இவ் பூஜை வழிபாட்டில் நகரசபை உபதவிசாளர் சுந்தரம் குமாரசுவாமி , நகரசபை உறுப்பினர்கள், நூலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.