வவுனியாவில் இலஞ்ச ஊழல் தொடர்பில் தெளிவூட்டல்!!

555

தெளிவூட்டல்

இலஞ்ச ஊழல் சட்டங்கள் தொடர்பில் தெளிவூட்டும் நோக்கில் இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (CqFFE) இணைந்து வவுனியாவில் மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி வவுனியாவின், நெடுங்கேணி, புளியங்குளம், ஓமந்தை, தாண்டிக்குளம், குருமன்காடு மற்றும் பழைய, புதிய பஸ் நிலையம், செட்டிகுளம் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் (02.10) தொடக்கம் இன்று (04.10) வரை மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் காணொளிகள், துண்டுபிரசுரங்கள், ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.

இதில் கபே அமைப்பில் வவுனியா மாவட்ட ஆலோசகர் மோகனராசா ராஜ்மோகன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து மக்களுக்கு ஊழல் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வுகளை வழங்கினர்.