வவுனியாவில் புதிதாக இராணுவ சோதனைச் சாவடிகள்!!

282

சோதனைச் சாவடிகள்

வவுனியா – பூந்தோட்டம், மதீனாநகர் சந்தி மற்றும் ஈச்சங்குளம் பகுதியில் புதிதாக இ ராணுவ சோ தனைச் சாவடிகள் அமைக்கபட்டுள்ளன. நேற்று முன்தினம் மதீனாநகர் பகுதியில் சில வீடுகளில் இராணுவத்தினர் சோ தனைகளை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த சோ தனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குறித்த சோ தனைச் சாவடிகளில் அவ்வீதியால் பயணிக்கும் வாகனங்கள் பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற கு ண்டு வெ டிப்பு சம்பவத்தின் போது குறித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சோ தனைச் சாவடிகள் சில வாரங்களுக்கு முன்னர் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த சோ தனை சாவடிகள் மீண்டும் அமைக்கபட்டுள்ளதால் பொதுமக்கள் அ ச்சத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரமும் பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் சோ தனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.