கார் விபத்தில் இருவர் பலத்த காயம்!!

289

கார் விபத்தில்..

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பிரதேசத்தில் கார் ஒன்று இன்று மாலை மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி செல்லும் போது ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பாமஸ்டன் பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த காரில் இருவர் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.