வவுனியாவில் கடும் மழை : மக்கள் மகிழ்ச்சி!!

432

கடும் மழை

வவுனியாவில் நிலவிய நீண்ட வறட்சியின் பின்னர் இன்று (06.10.2019) பிற்பகல் 2.30 மணி தொடக்கம் பலத்த காற்று மற்றும் இடி மின்னல் ஆகியவற்றுடன் தொடர்ச்சியாக பெய்த கடும் மழையினால் வீதிகள் அனைத்தும் நீர் நிரம்பி வெள்ளகாடாக காட்சியளிக்கின்றது.

இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி, நூலக வீதி, வைரவப்புளியங்குளம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

வடிகான்கள் சீர் செய்யப்படாமையாலேயே மழை நீர் வீதியில் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வறட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய வேளையில் மழை பெய்தமையினால் விவசாயிகளும் பொதுமக்களும் நன்மையடைந்துள்ளனர்.