ஆசிய தடகள போட்டிகள் சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றம்

993


சென்னை: ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரில் இருந்து புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக இந்திய தடகளக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், இலங்கை வீரர்கள் பங்கேற்றால் சென்னையில் ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.



இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தடகளக் கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவாலா, ஆசிய தடகளப் போட்டிகள் சென்னை நகரிலிருந்து புனே நகருக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை 3 ந் தேதி முதல் முதல் 7 ந் தேதி வரை புனே நகரில் இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கிறது என்றார்.