வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த சிறுமிகள்!!

597

சாதித்த சிறுமிகள்

வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் இரண்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். குறித்த பாடசாலையின் வரலாற்றில் இதுவே முதல் முறையாக புலமை பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் முகுந்த குமார் தெரிவித்துள்ளார்

லோகேஸ்வரன் பிரியதாயினி 159 புள்ளிகளையும், விஜயகுமாரன் பிரியங்கா 153 புள்ளிகளையும் பெற்று பரீட்சையில் சித்தியடைந்ததுடன் பாடசாலைக்கு பெருமையும் சேர்த்துக்கொடுத்துள்ளனர்.

அத்துடன் வவனியா இராசேந்திரன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இரா.கிருஷ் 164 புள்ளிகள் மற்றும் லக்சான் 159 புள்ளிகளை பெற்றுள்ளார்கள் பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.