வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற நவராத்திரி விழா!!

331

நவராத்திரி விழா

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நவராத்திரி விழா 2019 இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் கமலேஸ்வரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,

வர்த்தகர்கள், அறநெறி பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சக்தி புஜையுடன் ஆரம்பமான நவராத்திரி விழாவில் சகலகலாவல்லி மாலை பாடப்பட்டதுடன் அறநெறி பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், நிருத்தியாஞ்சலி, பேச்சு, தனிநடனம், வில்லுப்பாட்டு, கோலாட்டம், குழு நடனம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.