வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தை திறந்து வைத்த வடக்கு ஆளுனர்!!

411

கமக்கார ஒழுங்கமைப்புக்களின்..

வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம் கட்டிடம் இன்று வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக உள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் புனரமைக்கப்பட்ட குறித்த கட்டிடத்தை ஆளுனர் திறந்து வைத்தார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் 8 கமநல கேந்திர நிலையங்களும் அதன் கீழ் 256 கமக்கார அமைப்புக்கள் உள்ளன. அதனை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம் குறித்த பகுதியில் இயங்கவுள்ளதுடன் மாவட்டமட்ட விவசாயிகளின் பொருளாதார மற்றும் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் செயற்படவுள்ளது.

மாவட்ட சம்மேளனத் தலைவர் திரு.சேதுகாவலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் சி.சத்தியசீலன், பிரதி கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் இ.விஜயகுமார், பிரதி விவசாய பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன், சம்மேளன உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.