வவுனியா – நொச்சிமோட்டை பாலத்தில் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!!

296

வவுனியா – நொச்சிமோட்டை பாலத்தில்

வவுனியா – நொச்சிமோட்டை பகுதியில் அமைந்துள்ள பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பொதுமக்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், குறித்த பாலத்தில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய அவல நிலை தோன்றியுள்ள நிலையில், தற்பொழுது போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக இப்பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கோரிய போதிலும் இன்று வரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அது குறித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க தவறியுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பாலத்தினூடான போக்குவரத்து மேற்கொள்வதில் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அப்பாலத்தில் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பாலம் கடந்த சில தினங்களாக உடைந்த நிலையில் காணப்படுவதுடன், ஒரு பக்கம் ஊடாகவே வாகனங்கள் தமது பயணத்தினை மேற்கொள்ளவேண்டியுள்ளது. பாலத்தில் போடப்பட்டுள்ள தகரம் உடைந்த நிலையில் காணப்படுவதுடன், பாரஊர்த்திகள் பல பயணம் மேற்கொள்ளும் இப்பாலத்தில் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் இல்லை.

எனவே சாரதிகள் இப்பாலத்தில் அபயாகரமான போக்குவரத்தினையே மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக வினவுவதற்காக வவுனியா மாவட்டத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட போது அழைப்புக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.