வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் மாவட்டத்தில் இரண்டாம் நிலை!!

686

வவுனியா விபுலானந்தா கல்லூரி

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் பொன்.சிவநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் எமது பாடசாலையில் இருந்து 144 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 55 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதில் விஜயசங்கர் நிருத்தனன், கஜேந்திரன் ஜஸ்விந் ஆகிய இருவரும் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும், கடந்தகாலங்களை விட இம்முறை பெறுபேறு அதிகரித்துள்ளது. இதனை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றிகள் எனத் தெரிவித்தார்.