வவுனியாவில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியுடன் இளைஞன் கைது!!

290

இளைஞன் கைது

விடுதலைப் புலிகளின் இலச்சனை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் சின்னம் என்பவற்றுடன் இளைஞன் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (08.10.2019) மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிசார் மேற்கொண்ட வழமையான திடீர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த இளைஞன் விடுதலைப் புலிகளின் இலச்சனை பொறிக்கப்பட்ட தொப்பி மற்றும் இலச்சனை பொறிக்கப்பட்ட சின்னம் என்பவற்றை உடமையில் வைத்திருந்ததாக குறித்த இளைஞன் கைது செயயப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் தொடர்பில் வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இளைஞன் சுமார் 24 வயது மதிக்கத்தக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.