வவுனியா வைத்தியசாலையில் 7 வயது சிறுவன் ம ரணம் : உறவினர்கள் கு ழப்பம்!!

321

வவுனியா வைத்தியசாலையில்..

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 வயது சிறுவன் ஒருவர் ம ரணமடைந்துள்ளார். வைத்தியசாலையின் அசமந்த போக்கே ம ரணத்திற்கு காரணம் என உறவினர்கள் வைத்தியசாலையில் கூடியமையால் ப தற்றநிலை ஏற்பட்டது. இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஒ ருவன் நேற்று மாலை உடல்நிலை இயலாமல் இருப்பதாக வீட்டில் தெரிவித்துள்ளார். எனினும், மகன் விளையாட்டாக சொல்வதாக கருதி தந்தை அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

தொடர்ந்தும் சிறுவன் உடல்நிலை சரியில்லாத நிலையில் சத்தமிட்டதை அடுத்து தாயார் அதிகாலை 3 மணியளவில் சிறுவனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் காலை 8.30 மணியளவில் வைத்தியசாலையில் சிறுவன் ம ரணமடைந்துள்ளான்.

இந்நிலையில் வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாடே சிறுவனின் ம ரணத்திற்கு காரணம் என உறவினர்கள் வைத்தியசாலை வைத்தியர்களுடன் மு ரண்பட்டுள்ளனர். பொலிசார் தலையிட்டு நிலமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

வவுனியா, கற்குழியைச் சேர்ந்த எஸ்.டிலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு ம ரணமடைந்தவராவார். இதேவேளை, ம ரண விசாரணை அறிக்கையின் பின்னரே ம ரணத்திற்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.