வவுனியாவில் க டத்திச் செல்லப்பட்டு அ டித்துக் கொ ன்ற பின் பெற்றோல் ஊற்றி எ ரிக்கப்பட்ட குடும்பஸ்தர்?

443

வவுனியாவில்..

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் ச டலம் ஒன்று எ ரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இவர் கா ணாமல் போயிருந்த நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அவரின் ச டலம் வவுனியா கள்ளிக்குளம் பகுதியிலுள்ள பற்றைக்காட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்காத பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில்குளம் சந்தியில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இருந்து அவர் வவுனியா நகருக்கு ஒருவரை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை 6.30 மணியளவில் சென்றுள்ளார். பின்னர் அவர் கா ணாமல் போயுள்ளார்.

அவரது தொலைபேசி தரவின் அடிப்படையில் இறுதியாக கள்ளிக்குளத்தில் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு நடத்திய தேடுதலில் ச டலம் எ ரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அவர் க டத்திச் செல்லப்பட்டு கொ ல்லப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியிலிருந்த பெற்றோலை ஊற்றி எ ரிக்கப்பட்டுள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சுகந்தன் எனத் தெரியவருகின்றது.

நேற்று மதியம் 2 மணியளவில் வவுனியா நகருக்கு சென்ற வேளை கா ணாமல் போயுள்ளதாக உறவினர்களால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.