வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை : வேகமாக பரவும் ஆபத்தான நோய்!!

367

ஆபத்தான நோய்

வவுனியா நகர்ப்பகுதியில் 24 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினர் தெரிவித்தனர்.

வவுனியா நகரப்பகுதியில் டெங்கு தொற்று அதிகரித்துள்ளது. இங்கு 24 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 103 இடங்களில் நுளம்பு பெருக்கக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களும் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.