வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவர்கள் வெற்றிக்கு வழிவகுத்த பிலோமினா பிறேமகுமார் ஆசிரியர்!!

588

பிலோமினா பிறேமகுமார்

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளனர்.

புலமைப் பரிசில் பரீட்சையில் 144 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 55 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.அதில் விஜயசங்கர் நிருத்தனன், கஜேந்திரன் ஜஸ்விந் ஆகிய இருவரும் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மேலும் கடந்த காலங்களை விட இம்முறை பெறுபேறு அதிகரித்துள்ளது. இவ் மாணவர்கள் திறமைச்சித்தியினை பெற்று மாவட்ட மட்டத்தில் இப் பாடசாலை இரண்டாம் இடத்தினை பெறுவதற்கு ஆசிரியர் பிலோமினா பிறேமகுமார் அவர்களின் சேவை ஆழப்பெரியது.

அத்துடன் குறித்த ஆசிரியர் இப்பாடசாலையில் பல வருடங்களாக சேவையாற்றி வருவதுடன் ஆசிரியர் பணியிலிருந்து தற்போது ஒய்வு பெற்றுள்ளார். இவரது சேவைக்காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் திறமைத்சித்தியினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.