வவுனியா வர்த்தக நிலையங்களில் டெங்கு நுளம்பு பரிசோதனை நடவடிக்கை!!

493

டெங்கு நுளம்பு பரிசோதனை..

வவுனியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களில் அண்மைய காலமாக டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்துக்காணப்படுகின்றது. இதனால் 24 டெங்கு நோயர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து வியாபார, வர்த்தக நிலையங்களில் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வவுனியா மில் வீதி, பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி போன்ற வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் இன்று பரிசோதனை நடவடிக்கை பொது சுகதாதரப் பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வியாபார நிலையத்தின் மேல் தளங்களில் காணப்படும் மொட்டை மாடிகள், தண்ணீர்த் தாங்கிகள், கூரைகள், வெற்றுப் போத்தல்களில் மழை நீர் தேங்கி காணப்பட்டுள்ள இடங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விழிப்புணர்வு துண்டறிக்கைகள் குறித்த வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்டு தற்போது அப்பகுதிகள் சீரமைப்பதற்கு கால அவகாசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் குறைபாடுகளை திருத்த தவறியவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்ட பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமது வியாபார, வர்த்தக நிலையங்களில் காணப்படும் டெங்கு நுளம்பு பெருக்கத்தைக்கட்டுப்படுத்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்படும் இடங்களை அவதானித்து அதனைத் தடுப்பதற்கும் மழை நீர் வழிந்து செல்வதற்கான பூரண நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இதன்போது பொது சுகாதாரப்பரிசோதகர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கு ஆதரவாக வர்த்தக சங்க உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.