மனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

213

காத்திருந்த அதிர்ச்சி

தமிழகத்தில் மனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு கணவர் சென்ற போது அங்கு அவர்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த தம்பதி கோவிந்தசாமி(65)-குப்பம்மாள்(60). இந்த தம்பதிக்கு நாகராஜன்(35), ரவி(30) என்ற மகன்களும், கல்யாணி(28) என்ற மகளும் உள்ளார்.

கல்யாணியை ஆறுமுகம் என்பவருக்கும் கோவிந்தசாமி திருமணம் செய்து வைத்துள்ளார். கோவிந்தசாமி கான்ட்ராக்டராக அப்பகுதியில் 10 பேரை வைத்து சாலை போடும் பணி மற்றும் வீடு கட்டும் பணிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை ஆறுமுகம், தன் மனைவி கல்யாணியை பார்ப்பதற்காக மாமனார் கோவிந்தசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வீட்டில் இருந்த மாமனார் மனைவி மற்றும் குழந்தைகள் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போ ராடியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின் உடனடியாக மருத்துவமனைக்கு ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்க, வீட்டில் இருந்த நால்வர் உ யிரிழந்த நிலையில், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கல்யாணி, குழந்தைகள் சர்வேஸ்வரி (8) ,யோகப்பிரியா (6) ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்த சம்பவம் அதன் பின் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிந்தசாமி, தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து தொழிலுக்காக 80 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

அது மகளுக்கு கல்யாணம் முடித்த பின், இந்தக் கடனுக்கு வட்டி மேல் வட்டியாக அதிகரித்ததால், கடன் தொல்லை தாங்க முடியாமல், வேறு வழியின்றி குடும்பத்துடன் த ற்கொ லை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.

கோவிந்தசாமி, மனைவி குப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உ யிரிழத்தனர். மற்ற 3 பேரும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.