வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு பொலிஸார் தப்பியோட்டம்!!

643

வவுனியா கண்டி வீதியில்..

வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கிலில் சிவில் உடையுடன் வந்த பொலிஸார் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பித்துச்சென்ற சம்பவம் ஒன்று இன்று (14.10.2019) காலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியூடாக மோட்டார் சைக்கிலில் பயணித்த பெண் இரும்புவதற்கான சமிக்கையினை பிரயோகித்து வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கில் மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் இரு மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் தேசமடைந்ததுடன் அதன் பின்னர் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிலின் சாரதி தான் ஒர் பொலிஸார் என தெரிவித்து விபத்துக்குள்ளான பெண்ணின் மோட்டார் சைக்கில் சாவியினை பறிக்க முற்பட்டுள்ளார்.

சாவியினை வழங்க பெண் மறுத்த நிலையில் விபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிலின் சாரதி தான் பொலிஸ் நிலையத்திற்கு செல்வதாக தெரிவித்து அவரது மோட்டார் சைக்கிலினை அவ்விடத்திலிலேயே விட்டுச் சென்றாக விபத்தினை பார்வையிட்ட மக்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக விபத்துக்குள்ளான பெண் 119 அவசர பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் இரு மோட்டார் சைக்கிள்களையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.