போட்டியில் பங்கேற்க சென்ற ஹொக்கி வீரர்கள் கோர விபத்தில் உடல் நசுங்கி பலி!!

238

கோர விபத்தில்..

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஹொக்கி போட்டியில் பங்கேற்க காரில் சென்ற வீரர்கள் 4 பேர் ப லியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் ஹோசன்காபாத்தில் ‘தியான் சந்திரா டிராபி’ ஹாக்கி போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க ஒரு காரில் ஹாக்கி வீரர்கள் சிலர் சென்றுகொண்டிருந்தனர்.

இடார்சி என்ற பகுதியில் இருந்து கிளம்பிய கார், ரைசல்பூர் என்ற இடத்திற்கு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் மரம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 ஹாக்கி வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ப லியாகினர்.

மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.