75 வயதில் குழந்தை பெற்ற வயதான பெண்!!

261

75 வயதில்..

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் 75 வயது பெண் செயற்கை கருத்தரித்தல் முறை மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 75 வயது பெண் குழந்தை இல்லாத காரணத்தால், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

ஆனாலும் கூட அவருக்கு சொந்தமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்ததால், தனியார் மருத்துவமனையை அணுகி செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியுள்ளார்.

தாயாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பின், அதனை முயற்சித்து பார்த்துள்ளார்.

மருத்துவ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பலவீனமாக இருந்ததால் 6.5 மாதங்களுக்கு பின் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவருக்கு ஒரு நுரையீரல் மட்டுமே இருந்ததால் மருத்துவக்குழுவிற்கு பெரும் சவாலாக இருந்தது.

இறுதியில் 600 கிராம் எடையில் அழகிய குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தை மட்டும் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு குழந்தைகள் மருத்துவர் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது.