இந்தியாவில் தொடரும் சீரற்ற காலநிலை -131 பேர் பலி!

426

nature

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வெள்ளம் காரணமாக இமயமலைத் தொடரில் உள்ள கேதாரநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட புண்ணிய தலங்களிலும், சமோலி, ருத்ரபிரயாக், உத்தரகாசியிலும் மொத்தம் 71,440 யாத்ரீகர்கள் சிக்கி உள்ளனர்.

அவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர, 500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட்டில் தேவையான நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார்.