வவுனியாவில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வலைப்பந்தாட்டப் போட்டி : சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர் அணி வெற்றி!!

607

சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர் அணி வெற்றி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சங்கம் நடாத்திய வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இதன் இறுதியாட்டம் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இதில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர் அணியை எ திர்த்து கல்மடு வித்தியாலய ஆசிரியர் அணி மோ தியது.

ஆட்டத்தின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய அணி 18:4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசக சங்க தலைவர் அ.அமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக வவுனியா மாவட்டச் செயலர் நா.கமலதாசன் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட பயிற்றுநர் த.கமலன் மதிப்புறு விருந்தினராக எஸ்.ஜெ.ஆர்.கட்டுமான நிறுவன பணிப்பாளர் சி.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.