தோசை மாவில் தூக்க மாத்திரை : நண்பருடன் இணைந்து கணவரை கொ லை செய்த காதல் மனைவி!!

356

தோசை மாவில் தூக்க மாத்திரை

தமிழகத்தின் சென்னையில் கணவனுக்கு தோசை மாவில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து க ழுத்தை இ றுக்கி கொ லை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த புழல் புத்தகரத்தைச் சேர்ந்த சுரேஷ், அதே பகுதியில் இறைச்சிக்கடையொன்றில் வேலை பார்த்து வந்தார்.

சுரேஷ், அனுசுயா தம்பதிக்கு 5 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த ஞாயிறன்று காலை வீட்டில் சுரேஷ் இ றந்து கிடப்பதாக அவரது மனைவி அனுசுயா தொலைபேசி மூலம் புழல் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்து சுரேஷின் உ டலை கைப்பற்றிய காவல்துறை, உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொ லை என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அளவுக்கு அதிகமான தூ க்க மா த்திரை சாப்பிட்டது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது.

ஆனால், க ழுத்தில் காயம் இருந்ததால் க ழுத்தை இ றுக்கி கொ ன்றிருக்கலாம் என்றும் உடற்கூறு ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் மனைவி அனுசுயாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது, கணவர் சுரேஷை, கொ லை செய்ததை அனுசுயா ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அனுசுயாவுக்கு அவரது உறவினர் முரசொலிமாறன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தெரியவர சுரேஷ், அடிக்கடி கு டித்துவிட்டு வந்து த கராறு செய்துள்ளார். இதனால் உறவினர் முரசொலிமாறன் என்பவரின் ஆலோசனையின் பேரில் கணவருக்கு தோசையில் தூ க்க மா த்திரை கலந்து கொடுத்ததாகவும் அனுசுயா கூறியுள்ளார்.

ஆழ்ந்த தூக்கத்தில் மயங்கிய கணவரை து ப்பட்டாவால் க ழுத்தை நெ ரித்ததாகவும், இதற்கும் உறவினர் உதவியதாகவும் அனுசுயா கூறியுள்ளார். இதையடுத்து தற்கொ லை வழக்கை கொ லை வழக்காக மாற்றிய காவல்துறையினர், அனுசுயாவை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

கொ லைக்கு உதவிய முரசொலிமாறனை தேடி வருகிறார்கள். அக்காள் தம்பி உறவை சந்தேகப்பட்டு பேசியதாலையே தமது கணவரை கொ லை செய்ததாக அனுசுயா தெரிவித்துள்ளார்.