மனைவியின் ச டலத்தை அணைத்தபடி படுத்திருந்த இளைஞர் : விசாரணையில் வெளிவந்த சோகமான தகவல்!!

235

சோகமான தகவல்

தமிழகத்தின் சென்னையில் தூக்கிட்டு தற்கொ லை செய்து கொண்ட மனைவியின் சடலத்துடன் ம யக்க நிலையில் இருந்த இளைஞனை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் வெளிவந்த தகவல் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் மற்றும் சரண்யா தம்பதிக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தைகள் இல்லை என்ற வருத்தம் இருந்து வந்துள்ளது.

இதனால் இருவருக்கு இடையே அடிக்கடி த கராறும் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று குறித்த தம்பதி குடியிருந்த வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்காத நிலையில், அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அந்த குடியிருப்பின் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்துள்ளனர். அப்போது படுக்கையறையில் ரஞ்சித்தும் சரண்யாவும் அணைத்தபடி படுத்திருந்தனர்.

உள்ளே சென்ற பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சரண்யா தூக்கிட்டு தற்கொ லை செய்து கொண்டதற்கான அடையாளங்கள் இருந்துள்ளன. ரஞ்சித் ம யக்க நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்ட பொலிசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை இல்லாததால் ரஞ்சித் கு டிப்பழக்கத்துக்கு அ டிமையாகியுள்ளார்.

தினமும் கு டித்துவிட்டு வந்து மனைவியுடன் த கராறில் ஈடுபட்டுவந்துள்ளார் இதனால் மனவேதனையடைந்த சரண்யா, தற்கொ லை செய்ய முடிவு செய்தார். கடந்த 13 ஆம் திகதி இரவு வழக்கம்போல கணவன் மனைவிக்கு இடையே த கராறு ஏற்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலையில் ரஞ்சித் வெளியில் சென்றுள்ள நிலையில் சரண்யா, தூ க்குப்போட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

குடியிருப்புக்கு திரும்பிவந்த ரஞ்சித், மனைவி தூ க்கில் தொ ங்குவதைப் பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அவர் மனைவியின் ச டலத்தை மீட்டு அவரைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். பின்னர் ம துபானம் வாங்கிவந்த அவர், வீட்டிலிருந்த டீசலை அதில் கலந்துள்ளார். அதனைக் கு டித்துவிட்டு மனைவியின் சடலத்தோடு ரஞ்சித் படுத்துக்கொண்டார்.

சிறிது நேரத்தில் ரஞ்சித் மயங்கிவிட்டார். சுமார் ஒரு மணி நேரம் மனைவியின் ச டலத்தோடு ரஞ்சித் மயங்கிக் கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின்படி ரஞ்சித் மீட்கப்பட்டதாகவும் தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.