மயானத்தில் இறந்தவரின் உடலை புதைத்த போது காத்திருந்த ஆச்சரியம் : அலறியடித்து ஓடிய மக்கள்!!

214

இந்தியாவில் இ றந்த நபரை மயானத்தில் புதைத்த போது, திடீரென்று அவரது தலை அசைந்ததால், அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடிய நிலையில், அவர் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இருக்கும் பகல்லா கிராமத்தை சேர்ந்தவர் சிமானச் மாலிக். 55 வயதான இவர் ஆடு மேய்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆடு மேய்க்க சென்ற மாலிக் வீடு திரும்பவேயில்லை.

இதனால் அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வழக்கமாக அவர் எங்கெல்லாம் ஆடு மேய்ப்பாரோ அங்கெல்லாம் சென்று தேடியுள்ளனர்.

அப்போது ஒரு இடத்தில் ம யங்கிய நிலையில் கிடைந்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இறந்துவிட்டதாக கூறி, கதறி அழ துவங்கியுள்ளனர்.

அதன் பின் இது குறித்த அவர் வெளியூரில் இருக்கும் அவரின் உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இறுதிச்சடங்கிற்கான வேலை செய்யப்பட்டு, அவரின் உடல் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

மயானத்தின் குழிக்குள் அவரது உடலை வைக்கும் போது, திடீரென்று தலை மட்டும் அசைந்துள்ளது. இதைக் கண்ட அங்கிருந்த சிலர் அலறி அடித்து ஓட, குடும்பத்தினர் உடனடியாக அவரின் உ டலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்த போது, மாலிக் கடுமையான ஜுரத்தில் இருந்துள்ளார். இதனால் அவரின் உடல் பலவீனமாகி மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

மற்ற படி ஒன்றுமில்லை என்று கூற, குடும்பத்தினர் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். இன்னும் கொஞ்ச நேரம் ஆகியிருந்தால், மாலிக்கை மண்ணுக்குள் புதைத்திருப்பார்கள்.

கடைசி நிமிடங்களில் தலை இங்குமங்கும் அசையவும்தான் அவரை காப்பாற்றி இருக்கிறார்கள் என்று அங்கிருக்கும் உள்ளூர் வாசிகள் பேசி வருகின்றனர்.