மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் மாவட்ட பிரதிநிதிகளின் மாநாடு வவுனியாவில் நேற்று (18.10) மாலை இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ண, முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன், கட்சியின் ஆதரவாளர்கள், இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.





