வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் இளைஞர் தூ க்கிட்டு தற்கொ லை : காரணம் என்ன?

602

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில்..

வவுனியா, செட்டிகுளம் பொது வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தூ க்கிட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த இளைஞர் செட்டிகுளம் வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டோரிற்கான சிகிச்சை பிரிவில் தங்கி நின்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வைத்தியசாலையின் மலசலகூடத்திற்குள் சேலைன் ஏற்றுவதற்கு பயன்படும் வயரின் மூலம் தூ க்கில் தொ ங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

குறித்த நபர் சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சம்பவத்தில் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த சி.நிரோஜன் என்ற 33 வயது இளைஞரே ம ரணமடைந்தவராவார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.