வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு தாக்கம்

வவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை மலேரிய தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை வவுனியா பஜார் வீதியிலுள்ள வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும், கால்வாய்களுக்குள்ளும், நகரையண்டிய பகுதிகளிலும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை புகை மூலம் விரட்டியடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா நகரப்பகுதியில் டெங்கு நோயின் திடீர் பரம்பல் காணப்படுவதாகவும் வவுனியா பொது வைத்தியசாலையில் 46 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் வவுனியா சுகாதார சேவைகள் பணிமணையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





