முச்சக்கரவண்டி விபத்து

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (25.10.2019) மதியம் முச்சக்கரவண்டி ஒன்று வீதியினை விட்டு விலகி பாதசாரிகள் நடைபாதையுடன் மோதி விபத்துக்குள்ளானது.

புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி வாடி வீட்டிற்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு விலகி பாதசாரிகள் நடைபாதையுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






