குழந்தை சுர்ஜித்தை மீட்க 3வது நாளாக நீடிக்கும் போ ராட்டம் : 110 அடி ஆழத்தில் துளையிடும் பணி தீவிரம்!!

472

குழந்தை சுர்ஜித்

தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீ ட்க ரிக் இயந்திரம் மூலகமாக குழி தோண்டும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

குழந்தை குழுக்குள் விழுந்து 38 மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், 3வது நாளாக குழந்தையை மீ ட்க வீரர்கள் போ ராடி வருகின்றனர்.

2 வயதான சுர்ஜித் விழுந்துள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து 2மீ தொலைவில் மற்றொரு துளையிடப்பட்டு வருகிறது. 1 மீட்டர் அகலத்தில் 110அடி ஆழத்தில் குழுி தோண்டப்படவுள்ளது.

குழி தோண்டும் இடத்தில் பாறைகள் இருக்கும் என்பதால் சற்று தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமார் 2 மணிநேரம் முதல் 4 மணிநேரம் வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 தீயணைப்பு வீரர்களை குழிக்குள் இறக்கி குழந்தையை மீட்க திட்டம். கண்ணதாசன், திலீப் குமார், மணிகண்டன் ஆகிய வீரர்கள் குழந்தையை மீட்க குழிக்குள் இறங்கவுள்ளனர்.

சுரங்கம் தோண்டும் போது ஏற்படும் அ திர்வில் குழந்தை மேலும் கீழே சென்றுவிடாதபடி ஏர் லாக் மூலம் கை பிடிக்கப்பட்டுள்ளது.