வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற கேதாரகௌரி விரத நிறைவு!!

516


கேதாரகௌரி விரத நிறைவு



இந்துக்களின் விசேட விரதங்களில் ஒன்றாகிய கேதார கௌரி விரதத்தின் கௌரி காப்பு கட்டும் நிகழ்வும் தீபாவளி விசேட பூஜை வழிபாடும் வவுனியாவின் பல ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது.



அந்தவகையில் வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குரு பிரபாகர குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.




இந்துக்களின் விசேட விரதங்களில் ஒன்றாகிய கேதார கௌரி விரதம் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி 21 நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டு தீபாவளி தினமான இன்று கௌரிகாப்பு கட்டும் நிகழ்வு இடம்பெற்றது.


வரன் வேண்டியும், கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும் குறித்த விரதம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

தீபாவளி தினமான இன்றைய தினம் கௌரிகாப்பு கட்டுவதற்காக பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் ஆலயத்திற்கு வருதை தந்து விசேட அபிடேகம், ஆராதனைகள், பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் காப்பினையும் கட்டி அம்பாளின் அருட்காடாற்சங்களைப் பெற்றுக்கொண்டனர்.