தவறான புகைப்படம்?

சுர்ஜித்தின் மறைவு அனைவரையும் சோத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தவறான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பபட்டுள்ளது.

சுர்ஜித் இ றந்துவிட்டதாக நேற்று இரவு வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். அதன்பின் உடைலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், சுர்ஜித்தின் புகைப்படம் என்று சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகின்றது.

அது உண்மையில் சுர்ஜித் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள், அதை கவனிக்காமல் பெருமளவில் வீடியோ மற்றும் புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.





