வவுனியா பாவற்குளம் பகுதியில் பாம்பு தீண்டி 5 வயது சிறுவன் ம ரணம்!!

626

பாம்பு தீண்டி..

வவுனியா பாவற்குளம் பகுதியில் பாம்பு தீண்டி 5 வயது சிறுவன் இ றந்தமைக்கு காரணம் வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையே என கிராமவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாவற்குளம் படிவம் ஒன்று என்ற கிராமத்தில் ஐந்து வயது சிறுவன் (எஸ்.சுஜன்) பாம்பு தீண்டி கடந்த 20.10.2019 அன்று இ றந்துள்ளான்.

இத் துயர சம்பவம் இடம்பெற்றமைக்கு காரணம் அக்குடும்பத்தினருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையே என உறவினர்களும் கிராம மக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த கிராமத்தில் கோழிகூடு அளவில் இருக்கும் தகர குடிசையில் வசித்துவரும் கூலித்தொழிலாளி சுரேனிற்கு மூன்று பிள்ளைகள் அதில் மூத்த பிள்ளையாகிய சுஜனே உறக்கத்தில் இருக்கும்போது அரவம் தீண்டி இ றந்துள்ளார்.

இது தொடர்பாக பாவற்குளம் சனசமூக நிலையத்தின் தலைவர் அ.அலக்ஸ் கருத்து தெரிவிக்கையில், கடந்த மூன்று வருடங்களாக அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எமது கிராமத்தின் நிலை தொடர்பாக தெளிவுபடித்தியுள்ளோம்.

இருந்தபோதும் வீட்டுத்திட்டம் வழங்குவதில் அரசாங்கம் அசமந்தமாக செயற்பட்டமையே இந்தநிலைமைக்கு காரணம். இதுபோன்ற 10 உப குடும்பங்கள் எமது கிராமத்தில் கொட்டகைகளில் வசித்து வருகின்றனர். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த செட்டிக்குளம் பிரதேச செயலாளர் க.சிவகரன், குறித்த துயர சம்பவம் நடந்த குடும்பத்தினர் குடியிருக்கும் பகுதி நீர் வழிந்தோடும் பிரதேசமாகும். அதன் காரணமாகவே அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.

அந்த இடத்தை விட்டு வெறு ஒரு இடத்திற்கு அவர்கள் செல்லும் பட்சத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என தெரிவித்தார்.