வவுனியா ஈச்சங்குளத்தில் வீடு எ ரிந்து நா சம்!!

525

வவுனியா ஈச்சங்குளத்தில்

வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் இன்று (01.11.2019) காலை 11 மணியளவில் வீடு ஒன்று தீயில் எரிந்து நா சமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஈச்சங்குளம், அம்மிவைத்தான் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றின் தற்காலிக வீடு ஒன்றே தீயில் எரிந்து முற்றாக நா சமாகியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குறித்த வீட்டில் வசித்து வந்த நிலையில், வீட்டில் உள்ளவர்கள் வேலை நிமித்தம் வெளியில் சென்றிருந்த போதே குறித்த அ னர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தீயை கட்டுப்படுத்த அயலவர்கள், கிராம மக்கள் முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை. வீட்டில் இருந்த உடமைகள், பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நா சமாகியுள்ளன.

குறித்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில் ஈச்சங்குளம் பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.