வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரசங்காரம்!!

669

சூரசங்காரம்

வவுனியாவில் பல ஆலயங்களில் சூரசங்கார நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்துக்கள் முருகப் பெருமானிடம் வரம் வேண்டி அனுட்டிக்கும் விரதமே கந்தசஷ்டி.

இந்து மக்கள் பல்வேறு நிவர்த்திகளை வைத்து விரதம் அனுட்டித்து முருகனிடம் வரம் வேண்டுவார்கள். கந்தசஷ்டி விரதநாளின் இறுதி நாளான இன்று மாலை இந்து ஆலயங்களில் சூர சங்காரம் இடம்பெறும். அந்த வகையில், வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சூர சங்கார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

முருகப்பெருமானுக்கு விசேட அபிடேங்கள் இடம் பெற்று மங்கள வாத்தியம் முழங்க உள்வீதி வலம் வந்து பக்தர்களின் அரோகரா கோசத்துக்கு மத்தியில் மயில் வாகனத்தில் வெளிவீதி வலம் வந்த முருகப்பெருமான் சூரனை வ தம் செய்து பக்தர்களுக்கு அருள் பா லித்து காட்சி கொடுத்தார்.