5 வயது சிறுமியை கொ லை செய்துவிட்டு செய்த செயல் : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

217

5 வயது சிறுமியை..

தமிழகத்தில் குழந்தையை அ டித்து கொ லை செய்து பு தைத்துவிட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடிய மூன்று பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மேலகுப்பத்தை சேர்ந்தவர் உத்தண்டி (35). இவருக்கு ராஜேஸ்வரி(32) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

இவர்கள் அதே பகுதியில் இருக்கும் கமலம்(59) என்பவர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று கமலம் வீட்டு மாடியில் வேர்கடலையை காய வைத்து கொண்டிருந்தார். அப்போது ராஜேஸ்வரியின் குழந்தைகள் வேர் கடலையை மிதித்து விளையாடியதால் அதைப் பார்த்து,

ஆ த்திரமடைந்த கமலாவின் குடும்ப நண்பர் ஐயப்பன் (35) என்பவர், ராஜேஸ்வரியின் 2வது மகள் மீனா (5) என்ற சிறுமியின் தலைமுடியை பிடித்து மாடி சுவரில் அடித்ததால், ப லத்த கா யமடைந்த மீனா சம்பவ இடத்திலே பரிதாபமாக இ றந்தார்.

இந்த சம்பவம் கமலம், உறவினர் முருகன், அஞ்சலை ஆகியோருக்கு தெரியவர அவர்கள் ஐயப்பனை காப்பாற்றுவதற்காக ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் உத்தண்டியை தொடர்பு கொண்டு, மீனா மாடியில் இருந்து தவறி விழுந்து இ றந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அதன் பின், கமலத்தின் முந்திரி தோப்பு முதனை கிராமத்தில் இருப்பதால் மீனாவின் உ டலை முதனை கிராமத்திற்கு கொண்டு சென்று ஒரு முந்திரி மரத்தின் கீழ் பு தைத்துவிட்டு, ராஜேஸ்வரி மற்றும் உத்தண்டியை வீட்டை விட்டு வெளியே விடாமல் பார்த்து வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும், இவர்களுக்கு தெரியாமல் அங்கிருந்து தப்பி ஓடி வந்து பொலிசாருக்கு, புகார் தெரிவிக்க, பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில், கமலம், ஐயப்பன், அஞ்சலை ஆகிய மூன்று பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது விசாரணையில் மூவரும் மீனா இ றந்தது எப்படி என்பதையும், உ டலை பு தைத்த இடத்தை பற்றியும் கூறியுள்ளனர். இதையடுத்து புதைக்கப்பட்ட சிறுமியின் உடல், தோண்டி எடுத்து அதே இடத்தில் பி ரேத பரிசோதனை செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அருள்முருகன் என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.