குடும்பப் பெண்

வவுனியாவில் நேற்றிரவு குடும்பப் பெண்ணொருவர் ஓமந்தை பொலிஸாரால் கை து செய்யப்பட்டுள்ளார். தாண்டிக்குளத்திலிருந்து, கள்ளிக்குளத்திலுள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் குறித்த பெண் பயணித்துள்ளார்.

இதன்போது நொச்சிமோட்டை பாலத்தடியில் கடமையில் இருந்த பொலிஸார் ச ந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணை சோ தனையிட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண் தம்வசம் 500 கிராம் கே ரளா க ஞ் சாவை வைத்திருந்துள்ளார்.

இதனையடுத்தே வவுனியா, கள்ளிக்குளத்தை சேர்ந்த 40 வயதுடைய அந்த பெண் கை து செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த மோட்டார்சைக்கிளும் பொலிஸாரால் கை ப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின், ச ந்தேக நபரான பெண்ணை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆ ஜர்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




