வவுனியாவில் 42 கிராமங்களுக்கு மின்தடை : மக்களை ப ழிவாங்குகின்றதா மின்சாரசபை?

402


வவுனியாவில்..



வவுனியாவில் மூன்று கிராம அலுவலகர் பிரிவிலுள்ள 42 கிராமங்களுக்கு நேற்று முதல் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது.



வவுனியா – ஆச்சிபுரம் பகுதியில் நேற்று மாலை மின்சாரசபை ஊ ழியர்கள் மீது அப்பகுதியிலுள்ள கு ழுவினர் தா க்குதல் மேற்கொண்டுள்ளனர்.




இச்சம்பவத்தில் தொழிலினை மேற்கொள்ளச் சென்ற ஆறுபேர் கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.


மின்சார சபையின் பணிகளை மேற்கொள்ளச் சென்றவர்கள் மீது தா க்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும், தா க்குதல் ச ம்பவங்களுடன் தொ டர்புபட்டுள்ள கு ழுவினர் இன்று காலை வரையும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்து மின்சார சபை ஊழியர்கள் ப ணிப் புறக் கணிப்பு போ ராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில ஆசிகுளம், கோவில்குளம், சிதம்பரபுரம் கிராம அலுவலகர்ப் பிரிவை உள்ளடக்கிய சுமார் 42 கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது.


மின்சாரத்தடை காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட பலதரப்பட்டவர்கள் பா திக்கப்பட்டுள்ளனர்.

ஒருசிலருடன் ஏ ற்பட்ட த னிப்பட்ட மு ரண்பாடு காரணமாக வவுனியா மக்களை மின்சார சபை ப ழிவாங்குகின்றதா என பா திக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.