வவுனியாவில் மின்சார சபை ஊழியர்களை தா க்கியமை தொடர்பில் 10 பேர் கைது!!

312

10 பேர் கைது

வவுனியாவில் மின்சார சபை ஊழியர்களை தா க்கியமை தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, ஆச்சிபுரம், 10 ஆம் ஓழுங்கை பகுதிக்கு மின் து ண்டிப்புக்கு சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது கடந்த திங்கள் கிழமை தா க்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதில் 5 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், மின்சார சபை வாகனம் ஓன்றும் சே தமாக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.பி.வெலிகல அவர்களின் வழிகாட்டலில் பதில் பொறுப்பதிகாரி சம்பத் ரெரேரா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இதுவரை சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டு வி ளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று பெண்கள் கடந்த திங்கள் கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று (06.11) 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மின்சார சபை ஊழியர்கள் தா க்கப்பட்டமையால் மின்சார சபை ஊழியர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததும், மின்சாரத்தை வழங்கக் கோரி வவுனியாவில் இளைஞர்கள் ஆ ர்ப்பாட்டம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.