வவுனியாவில் தாயின் கண்முன்னே பலியான சிறுமி : மக்கள் சாரதியை தாக்கியதால் பதற்றம்!!

360


தாயின் கண்முன்னே..



வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் வைத்திய சாலை நோக்கி துவிச்சக்கர வண்டியில் தாய், மகள் பயணித்தவேளை அதே திசையில் பயணித்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இ ழந்து துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த திருநாவற்குளத்தை சேர்ந்த 9 வயதுடைய பிரியாளினி என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே தலை சிதறுண்டு பலியாகியுள்ளார்.



இதனை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றநிலை உருவானது. விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பித்துச்செல்ல முயற்சித்த வேளை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.




இதேவேளை சாரதி மது போதையில் இருந்ததாக அங்கிருந்தவர்களால் தெரிவிக்கப்படுகின்றதுடன்,


விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனம் பொதுமக்களால் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தை சேதப்படுத்தியது தொடர்பாக இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாயின் கண்முன்னே சி றுமி ப லியானமை பலரின் ம னத்தையும் பா திப்படையச் செய்துள்ளதுடன் அப்பகுதியே சோ கமயமாக காணப்பட்டது.