வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுமி பலி : சம்பவ இடத்திற்கு மாவட்ட நீதிபதி வருகை!!

634

கோர விபத்தில்..

வவுனியா, இலுப்பையடியில் டிப்பர் வாகனம் ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சி றுமி ஒருவர் உ டல் சி தறி பலியாகியுள்ளார்.

இன்று (06.11.2019) மாலை 4 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து தாண்டிக்குளம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் தாயும், மகளும் பயணித்துக் கொண்டிருந்த போது அதே திசையில் பின்னால் வந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய பிரியந்தி என்ற சி றுமியே சம்பவ இடத்தில் ப லியாகியுள்ளார்.


இதனையடுத்து குறித்த இடத்தில் மக்கள் ஒன்று கூடிய போது டிப்பர் சாரதி த ப்பியோட முயன்றுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற இளைஞர்கள் டிப்பர் சாரதியை வி ரட்டிப் பி டித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அத்துடன் டிப்பர் வாகனமும் சே தமாக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா மாவட்ட நீதிபதி சிறுமியின் ச டலத்தை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வவுனியா பொலிசாருக்கு பணித்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.