வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!!

410

போக்குவரத்து பொலிஸாரின்..

வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (10.11.2019) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 18 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 2 சாரதிகளுக்கு எ திராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது,

இரு மணிநேரத்தில் இரண்டு சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன் பதினெட்டு (18) சாரதிகளுக்கு எ திராக த ண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோ தனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம், முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம்,

தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு கு ற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.