வவுனியாவிற்கு ப லத்த பொ லிஸ் பா துகாப்புக்கு மத்தியில் சஜித் பிரேமதாசவின் தாயார் விஜயம்!!

340

சஜித் பிரேமதாசவின் தாயார்

புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பு வவுனியா பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் இன்று (12.11.2019) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தயார், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பு காலை 10 மணிக்கு என ஒழுங்கமைப்பு மேற்கொண்டு சந்திப்புக்கு மக்கள் வருகை தந்திருந்த போதிலும் சஜித் பிரேமதாசவின் தாயார் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வருகை தாமதம் ஏற்பட்டதினால் குறித்த சந்திப்பு மதியம் 12 மணிக்கு பின்னரே இடம்பெற்றிருந்தது.

இதன் காரணமாக கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்த மக்கள் சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறியிருந்தமையுடன் இறுதியில் அவர்களின் வருகையின் பின்னர் குறித்த மக்கள் சந்திப்பில் 100க்கும் குறைந்த மக்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கூட்டத்திற்கு வருகை தரும் அனைவரும் ப லத்த பொ லிஸ் சோ தனைக்குட்படுத்தப்பட்டனர். சஜித் பிரேமதாசவின் தயார் “எங்கட மகனுக்கு உங்கட வாக்கை போடுங்க” என தமிழில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.