வவுனியாவில் விபத்தை ஏற்படுத்திவிட்டு த ப்பிச்சென்ற பேருந்து!!

392

வவுனியாவில்..

வவுனியா ஏ9 வீதி சோயா வீதிக்கு அண்மையில் இன்று(14.11) மாலை இடம்பெற்ற விபத்தில் வயதான பெண் ஒருவர் கா யமடைந்த நிலையில் வவுனியா வை த்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

குறித்த பெண் வவுனியா நகரில் அமைந்துள்ள ஆலயத்திற்கு சென்றுவிட்டு சோயா வீதியில் அமைந்துள்ள அவரது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

ஏ9 பிரதான வீதியில் பயணித்த அவர் உரிய முறையில் சமிஞ்சை விளக்குகளைபயன்படுத்தி சிறு வீதியூடாக திரும்ப முற்பட்டுள்ளார். இதன்போது அதே திசையில் வவுனியாவில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வேகமாக பயணித்த தனியார் பேருந்து அவரை மோ தியுள்ளது. இதனால் தூ க்கி வீ சப்பட்ட பெ ண் கா யங்களிற்குள்ளானார்.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி சில நிமிடங்கள் அப்பகுதியில் நின்றுவிட்டு பேருந்துடன் அப்பகுதியில் இருந்து அகன்று சென்றுள்ளார்.

இந்நிலையில் வீதியால் பயணித்த சிலர் கா யமடைந்த பெண்ணை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பேருந்தின் இலக்கத்தின் மூலம் அதன் சாரதியை கைது செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.