வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன!!

289

தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள்

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டன.

வவுனியா மாவட்டத்தில் 117,333 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 142 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

குறித்த வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து காலை 7 மணிமுதல் பொ லிஸ் பா துகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளை இலகுபடுத்தும் முகமாக வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பகுதியில் அனைத்து பிரிவுக்களுக்கான வரைபடமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலகம் மற்றும் வாக்குச் சாவடிப் பகுதிகளில் பொ லிஸ் பா துகாப்பும் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் க ண்காணிப்பாளர்களும் க ண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் வ ன்முறைகளை க ண்காணிப்பதற்காக இ ரகசிய கமராக்களுடன் பொலிஸார் ரோ ந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.