180 பயணிகளுடன் புல்வெளியில் தரையிறங்கிய விமானம் : திக் திக் நிமிடங்கள்!!

300

புல்வெளியில் தரையிறங்கிய விமானம்

பெங்களூரு விமான நிலையத்தின் புல்வெளியில் 180 பயணிகளுடன் தரையிறங்கி மீண்டும் Take off ஆகி சென்ற விமானத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளது.

GoAir நிறுவனத்தைச் சேர்ந்த A320 என்ற விமானம், நாக்பூரில் இருந்து கடந்த 11ம் திகதி புறப்பட்டது. பெங்களூருவில் தரையிறங்க முயன்ற போது ஓடுபாதைக்கு அருகில் இருக்கும் புல்வெளிக்கு சறுக்கிச் சென்றது.

வி பரீதத்தை உணர்ந்த விமானி உடனடியாக மீண்டும் விமானத்தை Take Off செய்து ஐதராபாத்தில் அவசரநிலையில் தரையிறங்கியுள்ளார். இதனைதொடர்ந்து அனைத்து பயணிகளும் ப த்திரமாக தரையிறக்கப்பட்டனர்,

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக டிஜிசிஏ அமைப்பிற்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விமான ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.