இளம் தாயாரும் குழந்தையும் கிணற்றுக்குள் ச டலமாக : கணவரின் தொலைபேசி அழைப்பால் ச ந்தேகம்!!

289

இளம் தாயாரும் குழந்தையும்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம் தாயாரும் பிஞ்சு குழந்தையும் கி ணற்றில் ச டலமாக மீ ட்கப்பட்ட விவகாரத்தில் கணவரையும் குடும்பத்தையும் கை து செய்து விசாரிக்க கோரி அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிஜினா மற்றும் அவரது 8 மாதமேயான பிஞ்சு குழந்தையும் ச டலமாக கிணற்றுக்குள் இருந்து மீ ட்டுள்ளனர். கணவரும் அவரது உறவினர்களும் சேர்ந்து கொ லை செய்து கி ணற்றில் வீ சியிருக்கலாம் என நிஜினாவின் உறவினர்கள் ச ந்தேகம் எழுப்பியுள்ளனர்.

வரதட்சினை தொடர்பில் கணவரின் குடும்பத்தினர் நிஜினாவை தொடர்ந்து து ன்புறுத்தி வந்ததாக பு கார் தெரிவித்துள்ளனர். திங்களன்று நிஜினாவும் குழந்தையும் கிராமத்திற்கு வந்தார்களா என கேட்டு சகோதரர் நிஜேஷுக்கு நிஜினாவின் கணவர் தொலைப்பேசியில் அழைத்ததே ச ந்தேகத்தை ப லப்படுத்தியுள்ளது.

நிஜினா திருமணத்திற்கு பின்னர் இதுவரை பிறந்த வீட்டுக்கு தனியாக சென்றதில்லை என கூறப்படுகிறது. இரவு கணவன் மனைவி இடையே வா க்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் பிறந்த வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்ற ச ந்தேகத்தில் அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனைடையே நிஜேஷ் தமது சகோதரிக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், எந்த பலனும் இல்லாத நிலையில், அப்பகுதி பொதுமக்கள் நிஜினாவின் ச டலம் கி ணற்றில் கண்டெடுத்துள்ளதாக நிஜேஷிடம் அறிவித்துள்ளனர்.

நிஜேஷின் நண்பர்களே நிஜினாவின் ச டலத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் கணவரின் உறவினர்களோ கணவரோ எவரும் செல்லவில்லை எனவும் கு ற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து வி சாரணை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.